வியாழன், 18 நவம்பர், 2010

  •  மைசூர்பா செய்ய எளிய முறை                                                       தேவையான பொருட்கள்                                                                                                                                       கடலை    கடலை மாவு   ஒரு  கப்    , சர்க்கரை ஒரு  கப்    சன்பலாவேர் ஆயில் இரண்டு  கப்  நெய் நான்கு  ஸ்பூன்  சால்ட் ஒருசிட்டிகை                                                                                செய்முறை                                                     முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்துள்ள கடலைமாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு லேசாக பச்சை வாசம் போகும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும் . பின்னர் வானலியில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு நான்கு கிளறவேண்டும் .சர்க்கரை கரையும்வரை கிளறிவிட்டு (கொதிக்கவிட வேண்டாம்)பின் அதில் என்னையையும் நெய்யையும் சேர்த்து கிளறவும் .எண்ணெய் கொதிவரும்போது ஏற்கனவே வறுத்து வைத்துள்ள (கட்டி இல்லாமல் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும்.) கடலைமாவை அதில் போட்டு நான்கு கிளறவேண்டும்.சால்ட் ஒரு சிட்டிகையையும் சேர்த்துக்கொள்ளவும்  .அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும் .சிறிது நேரம் கிளறியபின் கடலைமாவு வானலியில் ஒட்டாமல் நன்கு திரண்டு சுற்றிவரும்.சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடம் நன்கு கிளறிவிடவும்.பின்னர் ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி நன்கு ஆறியபின் அதை வேண்டியவாறு சிறுசிறு துண்டுகள் செய்து கொள்ளலாம்..இப்போது சுவையான மைசூர்பா ரெடி. இது மிகவும் சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.இதை செய்து பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.               நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக